அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம் திருமுறை
தலம் : வலஞ்சுழி
திருச்சிற்றம்பலம்
அலையார் புனற்கங்கை நங்கை காண
அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்
தொலையாத வென்றியார் நின்றி யூரும்
நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டு
இலையார் படைகையி லேந்தி யெங்கும்
இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த
மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த
வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே. 1
திருச்சிற்றம்பலம்