ஐந்தாம்-திருமுறை

068 உள்ளா றாததோர்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : நள்ளாறு

திருச்சிற்றம்பலம்

 

உள்ளா றாததோர்

  புண்டரி கத்திரள்

தெள்ளா றாச்சிவ

  சோதித் திரளினைக்

கள்ளா றாதபொற்

  கொன்றை கமழ்சடை

நள்ளா றாவென

  நம்வினை நாசமே.  1 

 

 

ஆர ணப்பொரு

  ளாமரு ளாளனார்

வார ணத்துரி

  போர்த்த மணாளனார்

நார ணன்நண்ணி

  யேத்துநள் ளாறனார்

கார ணக்கலை

  ஞானக் கடவுளே.  2 

 

 

மேகம் பூண்டதோர்

  மேருவிற் கொண்டெயில்

சோகம் பூண்டழல்

  சோரத்தொட் டானவன்

பாகம் பூண்டமால்

  பங்கயத் தானொடு

நாகம் பூண்டுகூத்

  தாடுநள் ளாறனே.  3 

 

 

மலியுஞ் செஞ்சடை

  வாளர வம்மொடு

பொலியும் பூம்புனல்

  வைத்த புனிதனார்

நலியுங் கூற்றை

  நலிந்தநள் ளாறர்தம்

வலியுங் கண்டிறு

  மாந்து மகிழ்வனே.  4 

 

 

உறவ னாய்நிறைந்

  துள்ளங் குளிர்ப்பவன்

இறைவ னாகிநின்

  றெண்ணிறைந் தானவன்

நறவ நாறும்

  பொழிற்றிரு நள்ளாறன்

மறவ னாய்ப்பன்றிப்

  பின்சென்ற மாயமே.  5 

 

 

செக்க ரங்கழி

  செஞ்சுடர்ச் சோதியார்

நக்க ரங்கர

  வார்த்தநள் ளாறனார்

வக்க ரன்னுயிர்

  வவ்விய மாயற்குச்

சக்க ரமருள்

  செய்த சதுரரே.  6 

 

 

வஞ்ச நஞ்சிற்

  பொலிகின்ற கண்டத்தர்

விஞ்சை யிற்செல்வப்

  பாவைக்கு வேந்தனார்

வஞ்ச நெஞ்சத்

  தவர்க்கு வழிகொடார்

நஞ்ச நெஞ்சர்க்

  கருளுநள் ளாறரே.  7 

 

 

அல்ல னென்று

  மலர்க்கரு ளாயின

சொல்ல னென்றுசொல்

  லாமறைச் சோதியான்

வல்ல னென்றும்வல்

  லார்வளம் மிக்கவர்

நல்ல னென்றும்நல்

  லார்க்குநள் ளாறனே.  8 

 

 

பாம்ப ணைப்பள்ளி

  கொண்ட பரமனும்

பூம்ப ணைப்பொலி

  கின்ற புராணனுந்

தாம்ப ணிந்தளப்

  பொண்ணாத் தனித்தழல்

நாம்ப ணிந்தடி

  போற்றுநள் ளாறனே.  9 

 

 

இலங்கை மன்னன்

  இருபது தோளிற

மலங்க மால்வரை

  மேல்விரல் வைத்தவர்

நலங்கொள் நீற்றர்நள்

  ளாறரை நாடொறும்

வலங்கொள் வார்வினை

  யாயின மாயுமே. 10

 

திருச்சிற்றம்பலம்