அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம் திருமுறை
தலம் : சீர்காழி - 12-கழுமலம்
திருச்சிற்றம்பலம்
படையார் மழுவொன்று பற்றிய
கையன் பதிவினவிற்
கடையார் கொடிநெடு மாடங்க
ளோங்குங் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை
விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா
திருக்கும் பெரும்பதியே. 1
திருச்சிற்றம்பலம்