நான்காம்-திருமுறை

050 நெடியமால் பிரம

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : குறுக்கை வீரட்டம்

திருச்சிற்றம்பலம்

 

நெடியமால் பிரம னோடு 

  நீரெனும் பிலயங் கொள்ள

அடியொடு முடியுங் காணார் 

  அருச்சுனற் கம்பும் வில்லுந்

துடியுடை வேட ராகித் 

  தூயமந் திரங்கள் சொல்லிக்

கொடிநெடுந் தேர்கொ டுத்தார் 

  குறுக்கைவீ ரட்ட னாரே.  1 

 

 

ஆத்தமாம் அயனு மாலும் 

  அன்றிமற் றொழிந்த தேவர்

சோத்தமெம் பெருமான் என்று 

  தொழுதுதோத் திரங்கள் சொல்லத்

தீர்த்தமாம் அட்ட மீமுன் 

  சீருடை ஏழு நாளுங்

கூத்தராய் வீதி போந்தார் 

  குறுக்கைவீ ரட்ட னாரே. 2

 

இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன. 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சமணர் ஏவிய சர்ப்பம் துணித்தல்
View Details
நமிநந்தியடிகள்
View Details
ஸ்ரீ முத்து வடுகநாத சித்தர்
View Details