மூன்றாம்-திருமுறை

005 தக்கன் வேள்வி

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : சீர்காழி - 06-பூந்தராய்

திருச்சிற்றம்பலம்

 

தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்    

மிக்க செம்மை விமலன் வியன்கழல்    

        சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி    

        நன்ற தாகிய நம்பன் தானே.  1 

 

 

புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்    

வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ    

        ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி    

        மூல மாய முதல்வன் தானே.  2 

 

 

வேந்த ராயுல காள விருப்புறிற்    

பூந்த ராய்நகர் மேயவன் பொற்கழல்    

        நீதி யால்நினைந் தேத்தி யுள்கிடச்    

        சாதி யாவினை யான தானே.  3 

 

 

பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்    

ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்    

        சிந்தை நோயவை தீர நல்கிடும்    

        இந்து வார்சடை யெம்மி றையே.  4 

 

 

பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்    

மலிந்த புந்திய ராகி வணங்கிட    

        நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்    

        எந்தை யாயஎம் ஈசன் தானே.  5 

 

 

பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய்    

நாதன் சேவடி நாளும் நவின்றிட    

        நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல்    

        பில்கு வார்ச டைப்பிஞ் ஞகனே.  6 

 

 

புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய்    

பற்றி வாழும் பரமனைப் பாடிடப்    

        பாவ மாயின தீரப் பணித்திடுஞ்    

        சேவ தேறிய செல்வன் தானே.  7 

 

 

போத கத்துரி போர்த்தவன் பூந்தராய்    

காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்    

        அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்    

        பெருக்கி நின்ற எம்பிஞ் ஞகனே.  8 

 

 

மத்த மான இருவர் மருவொணா    

அத்த னானவன் மேவிய பூந்தராய்    

        ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை    

        மாளு மாறருள் செய்யுந் தானே.  9 

 

 

பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடிந்    

திருத்தல் செய்தபி ரான்இமை யோர்தொழப்    

        பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை    

        ஏந்து மான்மறி யெம்மி றையே.  10 

 

 

புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்    

அந்த மில்லெம் மடிகளை ஞானசம்    

        பந்தன் மாலைகொண் டேத்தி வாழுநும்    

        பந்த மார்வினை பாறி டுமே. 11

 

 

திருச்சிற்றம்பலம்