முதல்-திருமுறை

110 மருந்தவன் வானவர்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் :  இடைமருதூர்

திருச்சிற்றம்பலம்

 

மருந்தவன் வானவர் தானவர்க்கும்

பெருந்தகை பிறவினொ டிறவுமானான்

அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்

இருந்தவன் வளநகர் இடைமருதே.  1 

 

தோற்றவன் கேடவன் துணைமுலையாள்

கூற்றவன் கொல்புலித் தோலசைத்த

நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்

ஏற்றவன் வளநகர் இடைமருதே.  2 

 

படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்

நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்

முடைதலை இடுபலி கொண்டுழல்வான்

இடைமரு தினிதுறை யெம்மிறையே.  3 

 

பணைமுலை உமையொரு பங்கனொன்னார்

துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்

கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற

இணையிலி வளநகர் இடைமருதே.  4 

 

பொழிலவன் புயலவன் புயலியக்குந்

தொழிலவன் துயரவன் துயரகற்றுங்

கழலவன் கரியுரி போர்த்துகந்த

எழிலவன் வளநகர் இடைமருதே.  5 

 

நிறையவன் புனலொடு மதியும்வைத்த

பொறையவன் புகழவன் புகழநின்ற

மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட

இறையவன் வளநகர் இடைமருதே.  6 

 

நனிவளர் மதியொடு நாகம்வைத்த

பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்

முனிவரொ டமரர்கள் முறைவணங்க

இனிதுறை வளநகர் இடைமருதே.  7 

 

தருக்கின அரக்கன தாளுந்தோளும்

நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்

றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்

எரித்தவன் வளநகர் இடைமருதே.  8 

 

பெரியவன் பெண்ணினொ டாணுமானான்

வரியர வணைமறி கடற்றுயின்ற

கரியவன் அலரவன் காண்பரிய

எரியவன் வளநகர் இடைமருதே.  9 

 

சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன

புந்தியில் உரையவை பொருள்கொளாதே

அந்தணர் ஓத்தினொ டரவமோவா

எந்தைதன் வளநகர் இடைமருதே.  10 

 

இலைமலி பொழிலிடை மருதிறையை

நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன

பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்

உலகுறு புகழினொ டோ ங்குவரே. 11 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

இயற்பகை நாயனார்
View Details
வன்னி மரம்ரூபவ் கிணறுரூபவ் சிவலிங்கம் சாட்சி
View Details
வாயிலார் நாயனார்
View Details