அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்
திருமுறை : பதினொன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மதிமலி புரிசை
மாடக் கூடற்
பதிமிசை நிலவு
பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில்
ஆல வாயில்
மன்னிய சிவன்யான்
மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப்
படியெனப் பாவலர்க்
குரிமையின் உரிமையின்
உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை
குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்குஞ்
சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில்
பாண பத்திரன்
தன்போல் என்பால்
அன்பன் தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து
வரவிடுப் பதுவே. 1
திருச்சிற்றம்பலம்