பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 03. பிரணவ சமாதி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை

பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண்

ஆலித்த முத்திரை ஆங்கதிற்காரணம்

மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.  1 

 

 

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்

ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.  2 

 

 

ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்

ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்

ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன

ஓங்கார சீவ பரசிவ ரூபமே.  3 

 

 

வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்

அருக்கம் சராசரம் ஆகும் உலகில்

தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி

சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே.  4 

 

 

மலையும் மனோபவம் மருள்வன ஆவன

நிலையில் தரிசனம் தீப நெறியாம்

தலமும் குலமும் தவம்சித்த மாகும்

நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே.  5 

 

 

சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு

ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்

கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து

ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே.  6 

 

திருச்சிற்றம்பலம்