பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 25. முக்கரணம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்

கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்

திடமது போலச் சிவபர சீவர்

உடனுரை பேதமும் ஒன்றென லாமே.  1 

 

 

ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி

வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி

வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்

தெளியத் தெளியும் சிவபதம் தானே.  2 

 

 

முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்

கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி

மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக

ஒக்குமது உன்மனி ஓதுஉள் சமாதியே.  3 

 

திருச்சிற்றம்பலம்