பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 30. பசு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கற்ற பசுக்கள் கதறித் திரியினும்

கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்

முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது 

மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.  1 

 

 

கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்

எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி

வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது

கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே.  2 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

திருநாளைப் போவார் நாயனார்
View Details
புகழ்த்துணை நாயனார்
View Details
இயற்பகை நாயனார்
View Details