பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 15. போசன விதி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு

கட்ட அடிசில் அமுதென்று எதிர்கொள்வர்

ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்

விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.  1 

 

 

அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர்

உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப்

பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து

இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.  2 

திருச்சிற்றம்பலம்